திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்)
திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்) காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர் வாயோது வேதம் மலர்கின்ற தொல்சீர் மறையாளும் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சத்திரக்கூடம் சென்று சேர் மின்களே! - திருமங்கையாழ்வார். 108 திவ்ய தேசங்களில் இது 41வது திவ்ய தேசமாகும். சோழநாட்டு திருப்பதிகளில் 40 வது ஆகும். மூலவர் -கோவிந்தராஜ பெருமாள். உற்சவர் -தேவாதி தேவன், பார்த்தசாரதி, சித்திரகூடத்துள்ளான். தாயார் -புண்டரீகவல்லி. தீர்த்தம் -புண்டரீக தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள். விமானம் -சாத்வீக விமானம் தில்லை நடராஜர் (மூலவர்) தலப்பெயர்கள் தென்புலியூர், தில்லைவனம், கோயில், பெறும்பற்றுப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம், தில்லைநகர், திருச்சிற்றக்கூடம், புண்டரீகபுரம் எனப் பலப் பெயர்கள். புராணம் : கலிங்க நாட்டு மன்னன் கவேரனின் மனைவி லோபமுத்திரை. இவர்களுக்கு புத்திரப் பாக்கியம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான். காவிரியே அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள். அகத்திய முனிவர் காவிரியை ...

Comments
Post a Comment